ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


எளிதில் கிடைக்கக் கூடிய, விலை மலிவாக இருக்கக்கூடிய, பக்க விளைவுகள் இல்லாத, நோய்களைக் கட்டுப்படுத்தும் வேதிப் பொருட் களைக் கொண்ட உணவுப் பொரு ளான வெந்தயம், பல்வேறு நோய் களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது.
வெந்தயத்தில் நிறைய வேதிப் பொருட்கள் உள்ளன. அவற்றில் இன்சுலின் சாராத நீரிழிவைக் கட்டுப் படுத்தும் வேதிப்பொருட்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்:
1. குயிர்செடின், 2. டிரைகோனலின், 3. டைசோ ஜெனின், 4. கேலக்டோமனான், 5. ஹைட்ராக்சி ஐசோலூசைன் (4)
குயிர்செடின்: இது மருத்துவக் குணம் கொண்ட பிளேவனாய்டு. இது நீரிழிவு நோயைப் பல்வேறு வகைகளில் கட்டுப்படுத்துகிறது:
அ) குடலில் சர்க்கரை (குளுகோஸ்) உறிஞ்சப்படும் நிலையில் தடுக்கப்படுவதால், ரத்தத்தில் குளுகோஸ் உயர்வதைத் தடுக்கிறது.
ஆ) ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத் தும் நாளமில்லா சுரப்பியான இன்சுலினைச் சுரக்கக் கூடிய கணையச் செல்களை ஊக்குவிப்பது மட்டுமில் லாமல் அழியாமலும் பாதுகாக்கிறது.
இ) ரத்தத்தில் உள்ள குளுகோஸை தசைகள் அதிகம் எடுத்துக்கொள்ளத் துணைபுரிவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
டிரைகோனலின்: இது ஆல்கலாய்டு வகையைச் சேர்ந்த வேதிப்பொருள். வெந்தயத்தைச் சட்டியில் இட்டுப் பொன்வறுவலாக வறுக்கும்போது, அதன் கசப்புத்தன்மை குறையும். இவ்வாறு வறுக்கும்போது டிரைகோனலின் என்ற ஆல்கலாய்டு வேதிமாற்றம் அடைந்து நிக்கோடினிக் அமிலம் என்ற வைட்டமின் பி 3-யாக உருவாகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் வறுத்த வெந் தயத்தை உட்கொண்டால் வைட்டமின் பி 3 குறைவால் ஏற்படும் நோய்களான வாய்ப்புண்; கழிச்சல் போன்றவை தடுக்கப்படும். முளைகட்டிய வெந்தய விதையிலும் வைட்டமின் பி 3 உருவாகிறது என் பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.
டைசோஜெனின்: வெந்தயத்தில் உள்ள சப்போனின் வகையைச் சேர்ந்த வேதிப் பொருள் இது. நோய் அறிகுறிகளை உடனடியாகக் குறைக் கும் ஸ்டீராய்டுகள் என்ற ஆங்கில மருந்துகளைச் செயற்கையாகத் தயா ரிக்க உதவும் மூலப்பொருள் இது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை இந்த வேதிப்பொருள் மலம் வழியாக வெளியேற்றுவ தால், நீரிழிவின் துணைநோயான ரத்தக்கொழுப்பின் அளவை உடலில் குறைத்து, சரியான விகிதத்தை அடைய உதவுகிறது. அத்துடன், ரத்தக் குளுகோஸ் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
கேலக்டோமனான்: வெந்தயத்தில் உள்ள கரையும்தன்மை கொண்ட நார் பொருள் இது. இந்த வேதிப்பொருள்தான் நீரில் வெந்தயத்தை ஊற வைக்கும்போது ஏற்படும் வழுவழுப்பு தன்மைக்குக் காரணம். இது மலச்சிக்கலை நீக்கும்; ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை குறைக்கும்; கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது.
ஹைட்ராக்சி ஐசோலூசைன் (4 ): வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலம் இது. ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்திருந்தால் மட்டுமே, இன்சுலினைச் சுரக்கத் தூண்டி ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவுக்குக் கொண்டுவரும் இதன் சிறப்பான செய லால், நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவாக நமது அஞ்சறைப் பெட்டியில் இடமளித்த முன்னோர் அறிவு வியக்கும்படி உள்ளது.
-விடுதலை,8.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக