திங்கள், 10 அக்டோபர், 2016

கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி

உணவில் அதிகமான காரம், எண்ணெய் பொருட்கள், காலம் தவறி சாப்பிடுவது, இரவு நேரத் தில் அதிக நேரம் விழித்திருப் பது போன்றவற்றால் உடல் உஷ்ணமாகி கல்லீரல் கெட்டுப் போகிறது. மது குடிப்பது, நீரில் கலந்து வரும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது. எளிதில் கிடைக்க கூடிய சுக்கு, மிளகு, சீரகம், பப்பாளி, வெங் காயம் போன்றவை கல்லீரலை பலப்படுத்தும், நோயை தடுக் கும் மருந்தாக அமைகிறது.
பப்பாளியை பயன்படுத்தி கல்லீரல் நோய்களை குணப் படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பப்பாளி, சீரகம். பப்பாளி பழத்தை பசையாக அரைத்து, 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை எடுத்து கொண்டால் கல்லீரல் பாதிப் பது தடுக்கப்படும். மஞ்சள் காமாலையின் அளவு குறை யும்.
தொற்றினால் வரும் மஞ்சள் காமாலைக்கு இது மருந் தாகிறது. ஈரல் வீக்கத்தை வற் றிப்போக செய்கிறது. கல்லீரல், ஈரல் பலப்படுவதுடன் நன்றாக செயல்படும். பப்பாளியில் உள்ள வேதிப்பொருள், உட லுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை கொண்டு கல்லீரலில் ஏற்படும் கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக் கலாம். சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்க வும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். இந்த மருந்தில் உப்பு, சர்க்கரை சேர்க்க கூடாது. ரசாயன மருந்து களால் கல்லீரல் கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஈரலை பாதுகாக்கும் மருந்தாக வெங்காயம், மிளகு விளங்கு கிறது. நாவல் பழத்தை பயன் படுத்தி கல்லீரல் வீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: நாவல்பழம், சுக்குப்பொடி. நாவல் பழத்தின் சதை பகு தியை எடுக்கவும். இதனுடன், கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு மாதம் குடித்து வந்தால், கல்லீரல் வீக்கம் குறைய ஆரம்பிக்கும். ஈரலில் வீக்கம் ஏற்பட்டால், வயிறு கனத்து போகும். உடல் சிறுத்து கை கால்கள் மெலிந்து காணப் படும்.
முகம் ஒட்டிப்போகும். வயிறு, காலில் வீக்கம் ஏற் பட்டு பசியின்மை இருக்கும். இந்நிலையில், கல்லீரல் வீக்கத்துக்கு நாவல் பழம் அற்புத மருந்தாகிது. கல்லீரல் பிரச்சினைகளை தவிர்க்க அசைவ உணவுகள், காரம் ஆகியவற்றை அளவுடன் எடுத்துக்கொள்வது அவசியம்.


ஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்

சிறுநீரகக் கல் ஒரு கடின மான படிக கனிம பொருள். சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகும் கற்களே சிறுநீரில் ரத்தம் வருவதற்கு ஒரு பொதுவான காரணமாகும். இடுப்பு பக்கவாட்டிலும் வலி வருவதற்கு காரணமாகும். யாருக்கு வேண்டுமானலும் கற் கள் உருவாகலாம். ஆனால் சில நோய்கள் மற்றும் நிலைப் பாடு காரணமாக மருந்து எடுத்து கொள்பவர்கள் மிகவும் பாதிக் கப்படுகின்றனர்.
சிறுநீர்க் குழாய் கற்கள் பெண் களை காட்டிலும் ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏற்கெ னவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது, மீண்டும் உருவாகும் சாத்தியம் உள்ளது. குடும்ப வரலாறும் சிறுநீரகக் கற்கள் வருவதற்கு காரணமாகிறது. பெரும்பாலான கற்கள் கால்சியத்தால் உருவா னவை மற்றும் யூரிக் அமிலம், மெக்னீசியம், அமோனியத்தால் உருவானவை. சிறுநீர் ஓட்டத் தின் அடைப்பும் கல் உருவாவ தற்கு வழிவகுக்கும்.
கீல்வாதம் நம் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து யூரிக் அமில கற்கள் உருவாக்க வழிவகுக்கும்.  சிறு நீரகத்தில் அதிக கால்சியம் காரணமாகவும் கற்கள் ஏற்பட லாம். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள் பட்ட நோய்களும், கற்கள் வள ரும் ஆபத்தும் அதிகரிக்கும். குடல் அழற்சி நோய் இருப்ப வர்களுக்கு கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.  குடல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் சிறுநீரகக் கற்கள் அதிகரிக்க ஆபத்துள்ளது.
-விடுதலை,18.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக