செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கொஞ்சம் இஞ்சி... 



நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருளான இஞ்சி பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை, பெரும்பாலான வீடுகளில் பித்தம், மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரீதியாக இஞ்சிக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமாரிடம் கேட்டோம்.

பசியின்மை, வாந்தி உணர்வு, வயிறு உப்புசம், மூச்சுத்திணறல், பெருவயிறு(வயிறு வீக்கம்) முடக்குவாதம், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை உஷ்ண தன்மை கொண்ட இஞ்சி குணப்படுத்தும் சக்தி உடையது. பெரு வயிறு பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, வயிற்றின் மேல் பகுதியில் இஞ்சியை அரைத்து தடவி வரலாம். மேலும், சுவை உணர்வு, பாலுணர்வு ஆகியவற்றையும் இஞ்சி அதிகப்படுத்தும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சியை லேகியம் மற்றும் சூரணமாக கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இஞ்சியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்துக்கு ஆர்த்ரக்க ரசாயனம்( என்பது இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர்) எனவும், சூரணத்துக்குத் திரிகடுக சூரணம் எனவும் பெயர்.

இஞ்சியைக் காய வைத்து, சுக்காக மாற்றி சவுபாக்கிய லேகியம் தயாரிக்கிறோம். ஆர்த்ரக்க ரசாயனத்தில் இஞ்சியுடன் வெல்லம், லவங்கப் பட்டை, பச்சிலை(மூலிகை) குருவேர், கோரைக்கிழங்கு, தணியா, தேன் மற்றும் நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இஞ்சியை முக்கிய பொருளாக வைத்து தயாரிக்கப்படும் எல்லா மருந்துகளும் கார சுவை கொண்டவை. ஆகவே, இஞ்சி, சுக்கு போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. முக்கியமாக, அல்சரால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகளை சாப்பிட வேண்டும்.
-விடுதலை,20.2.17

காரட் கண்ணுக்கு நல்லதா?

காரட் சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றி விடலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவிவருகிறது. இன்றும் அது வலுவாக நம்பப்படுவதற்கு என்ன காரணம்?
ராயல் விமானப் படையும் காரட்டும்

ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளுக்குக் காரட் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் அய்ரோப்பாவில் பாம்புக் கடிக்கும், பால்வினை நோய்க்கும் மருந்தாகக் காரட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர் இரவு நேரத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், இதற்கு அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டு வந்ததுதான் காரணம் என்றும் ஒரு விமானி தெரிவித்தார். தங்கள் நாட்டு விமானப்படையினரின் ஆற்றலுக்கும் - குறிப்பாக இருட்டில்கூடத் தெளிவாகப் பார்த்து எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கும் தினமும் அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதே காரணம் என்றும் பிரிட்டிஷ் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதற்குப் பிறகு காரட் சாப்பிட்டால் பார்வை நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்தது.

உண்மையிலேயே காரட் கண்ணுக்கு நல்லதா? கண்ணுக்குத் தேவையான எல்லாச் சத்தும் காரட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழலாம்.

வைட்டமின் ஏ: பார்வைத் திறனோடு நெருங்கிய தொடர்பு கொண்டது வைட்டமின் ஏ. கீரை, காரட், பால், முட்டை, ஈரல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ இருக்கிறது. சாப்பிடும்போது சக்கையென நினைத்துத் தூர எறிகிறோமே அந்தக் கறிவேப்பிலையிலும் கொத்துமல்லியிலும்தான் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அது நிறைந்துள்ள உணவுகள் உதவும். 40 ஆண்டுகளுக்கு முன் வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாததாலும், போதிய அளவு வைட்டமின் ஏ சத்து கிடைக்காத தாலும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு வயிற்றில் புழுத்தொற்று இருந்தால், வைட்டமின் ஏ சத்தை உடல் கிரகிக்க முடியாத நிலைமை இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.

அரசுத் திட்டம்: வைட்டமின் ஏ சத்துப் பற்றாக் குறைக்கான அறி குறிகள் தெரிந்தவுடன் வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவை அதிகம் உட்கொண்டாலே நிரந்தரப் பார்வையிழப்பைத் தடுத்து விடலாம். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தில் இருந்து, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் அய்ந்து வயதுவரை வைட்டமின் ஏ சத்துத் திரவம் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் / துணைச் சுகாதார நிலையங்கள் மூலம் கொடுக்கப் பட்டது. இன்றும் இத்திட்டம் தொடர்கிறது.

-விடுதலை,20.2.17

திங்கள், 20 பிப்ரவரி, 2017

வீடுகளில் வளர்க்க 6 தாவரங்களுக்கு தடை



சென்னை, பிப்.18 இந்தி யாவில் இயற்றப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இல் வன உயிரினங்கள் எண் ணிக்கை, அவற்றின் முக்கியத் துவம் அடிப்படையில் பட் டியல்-1 முதல் பட்டியல்- 6 வரை என வகைப்படுத்தப் பட்டு அவற்றை வேட்டை யாடவே, வேட்டையாட முயன் றாலே சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த 6 வகை பட்டியல் களில் தெரிவிக்கப்பட்ட உயிரி னங்கள் அனைத்தும் பாதுகாக் கப்பட வேண்டிய வன உயி ரினங்களாகக் கருதப்படுகின்றன. இதில், 6-ஆவது பட்டியலில் 6 அரிய வகை தாவரங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த 6 தாவரங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்களாகக் கருதப் படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலரும், வன உயிரின ஆராய்ச்சியாளருமான வெங்க டேஷ் கூறியதாவது:

இயற்கைச் சூழலில் தானாக வளரும் அனைத்து உயிரினங் களையும் வன உயிரினங்கள் எனலாம். அதனால், வன விலங்குகளைப் போல் வனப் பகுதிகளில் அரிதாகக் காணப் படுவதால் சைகஸ் பெட்டேமி (மதன காமராஜா அல்லது ஏந்த பனை), புளூ வாண்டா, ரெட் வாண்டா, குத், லேடி சிலீப்பர் ஆர்கிட், குடுவை பூச்சி உண் ணும் தாவரம் (குடுவை தாவரம்) ஆகிய 6 வகை அரிய தாவரங்களும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் பட் டியல் 6-இல் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த தாவரங்களைச் சேக ரிக்க வேண்டுமெனில் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் இந்தத் தாவரங்களை வாங்கவோ, விற்கவோ, ஏற்றுமதி செய் யவோ, வீடுகளில் வளர்க்கவோ முற்றிலும் தடை செய்யப்பட் டுள்ளது. இந்த தாவரங்களை வீட்டில் வைத்திருப்பதும் குற் றமாகவே கருதப்படுகிறது.

சைகஸ் பெட்டேமி தாவரம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மற்றும் கடப்பா மலைப் பகுதிகளில் மட்டுமே உள்ளது. மருந்துகளுக்கு இந்தத் தாவரம் அதிகமாக பயன் படுத்தப்படுவதால் அழிந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த மலைப் பகுதிகளைச் சுற்றி தொடர்ச்சியாக ஏற்படும் காட்டுத் தீயாலும் இவை அழிந்து வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படும் ரெட் வாண்டா தாவரத்தின் பூக்கள் பார்ப்பதற்கு அழகாகவும், ரம்மியமாகவும் இருக்கும். இத் தாவரம் காஸ்டல் என்று மற் றொரு பெயரிலும் அழைக்கப் படுகிறது. காஷ்மீர் மலைகள் மற்றும் மேற்குத் தெடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 2,500 முதல் 3,000 மீட்டர் உய ரத்தில் வளரும் தன்மை கொண் டது. இத்தாவரத்தின் வேர் பாரம்பரியமாக மருந்து மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக் கவும் பயன்படுத்தப்படுகிறது.

குடுவை என்னும் பூச்சி உண்ணும் தாவரத்தின் இலை ஒரு குடுவை போல் இருக்கும். இதனுள் ஒரு வகை திரவம் நிரம்பியிருக்கும். பூச்சிகள் இந்த தாவரத்தில் அமரும்போது குடுவை போன்ற இலைக்குள் இருக்கும் திரவத்தால் ஈர்க்கப் பட்டு குடுவைக்குள் அந்த பூச்சி வழுக்கி விழுந்துவிடும். மூழ்கும் பூச்சிகள் திரவத்தில் உள்ள வேதியியல் நொதிப் பொருட்களால் கரைக்கப்படும். இந்த கரைக்கப்பட்ட கரைசல் அமினோ அமிலமாக மாற்றப் படும். இதை தாவரம் தன் வளர்ச்சிக்காக எடுத்துக்கொள் ளும். இந்தத் தாவரம் காடு களில் அரிதாக காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-விடுதலை,18.2.17

திங்கள், 13 பிப்ரவரி, 2017

கொய்யாவின் மருத்துவ குணங்கள்



கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங் கள்சாப்பிட்டு வந்தால் தேவை யில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து. வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது.

சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான தேர்வு. பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர் களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிற வர்களும் கொய்யாவோடு நட்புறவு வைத்து கொள்வது நல்லது.

உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டை யிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட  கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.

 -விடுதலை,13.2.17

.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

வாய் நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா? இதோ இருக்குங்க மருந்து..!



நல்ல சுவையான உணவு களை உண்ட பின், வாயிலி ருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.
ஆகவே நிறைய பேர் சாப் பிட்ட பின், வாய் நாற் றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்கு களை, ஏதேனும் சுயிங் கம் களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.
ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக் கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்ல லாமே!!!
ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென் றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட் டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத் தையும் தடுக்கும்.
மேலும் ஆயுர்வேத மருத் துவத்தில் கிராம்பை சாப்பிட் டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல் லப்படுகிறது.
அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட் டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதி னாவை எதற்கு பயன்படுத் துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.
கொய்யாப்பழம்: பழங் களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட் களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மாதுளை: அனைவருக் கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக் கத்தை வைத்துக் கொண் டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்,
எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு,
உடல் ஆரோக்கியமாக வும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
-விடுதலை ஞா.ம.23.8.14

சனி, 11 பிப்ரவரி, 2017

பக்கவாதத்தை போக்கும் ஜாதிக்காய்


ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய்  கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
ஜாதிக்காய் எண்ணெயில் அடங்கியுள்ள மிரிஸ்டிசின் என்ற வேதியல் பொருள் பலவிதமான  நோய்களைக் குண மாக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஒலியோரேசின் கொழுப்பு, வெண்ணெய் போன்றவை  வாதம் மற்றும் தசைப் பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.
ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும்,  உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம் ஆகிய வற்றைப் போக்கும்.
சிறு  அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும். எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால்  காது நோய், காது வலி தீரும்.10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால்  அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.
ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட செரிமான மின்மையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து  விடும். ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும். ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன்  தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்ற வற்றையும் கட்டுப்படுத்துகிறது.
-விடுதலை,22.9.14

பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...


வெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது அல்லவா? குழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை. சிலவகை உணவுக்கு  ருசி சேர்ப்பதே வெங் காயம்தான். வெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா? வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு  நிகர் ஏது?
வெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப்  பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும். வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு  பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள்  உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது  இந்திய நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு. உலகிலேயே முதன் முதலாக எகிப்து  நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் சி சத்து அதிகமாக உண்டு. பெரும்பாலும்  வெங்காயத்தை பச்சையாக உண்ணு வதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து  சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றிய வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச்  சாப்பிடலாம்.
உடல் பருமனைக் குறைக்க
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிகமிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்பு வோர் உணவில் வெங்காயத்தைத்  தாராளமாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல்  தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் செரிமானமாக வெங்காயம்  உதவுகிறது.
உடல் வெப்பக் கடுப்பு அகல...
பல்வேறு காரணங்களால் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் வெப்பத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க  உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
சாதாரண தலைவலிக்கு
சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.
விசக் கடிக்கு
வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற நச்சு உயிரினங்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.
இருமலுக்கு...
பொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு  வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.
மூளையின் சக்தி பெருகும்
மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங் காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. ஆகவே, தினமும்  வெங் காயத்தை சூப்பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது.  வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
பல்வலி, ஈறு வலி
பற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை  அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.பிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில்  நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.
உடல் அயர்வும் வலியும் நீங்க
அரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி  உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.
குடல் புழுக்கள் நீங்க
குழந்தைகளின் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அந்தச்  சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.
-விடுதலை,22.9.14

புதன், 1 பிப்ரவரி, 2017

கர்ப்பகால வாந்தியைத் தடுக்க எளிய வழி!



கர்ப்பகாலத்தில் அடிக்கடி வாந்தியால் தொல்லைக்கு ஆளாகிற பெண்கள், மருந்து _ மாத்திரை எடுத்துக் கொள்ளாமலேயே இயற்கை வழியில் வாந்தியைக் கட்டுப்படுத்த முடியும். அதுதான் சிறந்த முறையும்கூட. அதற்கான சில யோசனைகள்.

1. உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். ஆனால், அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள். தினமும் தயிர்சாதம், மாவடுதான் பிடிக்கிறது என்றால் அதையே சாப்பிடுங்கள்.

2. வாந்தி வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சைப் பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். எலுமிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தியையும், குமட்டலையும் தடுங்கள். வைட்டமின் _ ‘சி’ கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக நல்லது.

3. குமட்டலைத் தரும் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவது நல்லது. இது அஜீரணத்துக்கும் நல்லது. தலை குளிக்கும்-போது ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

4. சாப்பிட்டதும் சிறிது நேரம் நடப்பது ஒன்று. பொரியல் பிடிக்காவிட்டால், எல்லா காய்கறிகளையும் போட்டு சூப் போட்டு சாப்பிடுங்கள். தக்காளி சூப் கூட வாந்தியைக் கட்டுப்படுத்தும்.

5. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாந்தியை நிறுத்த லெமன் சோடா சாப்பிடாதீர்கள். அது உடல் நலத்திற்கும் நல்லதல்ல.

6. அதேபோல் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை சாப்பிடாதீர்கள். பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்.

7. தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள். வாந்தி, குமட்டலுக்கு தண்ணீர்தான் சிறந்த மருந்து. ஒரு மணி நேரத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். வாந்தியும் குமட்டலும் குறைவதை உணர்வீர்கள். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க இது உதவும்.

8. புதினாவை ஒரு கப் வெந்நீரில் போட்டு 5_10 நிமிடம் மூடி வையுங்கள். பின் அதை வடிகட்டி அதனுடன் சர்க்கரை அல்லது தேனைக் கலந்து காலையில் எழுந்தவுடன் பருகுங்கள். வாந்தி மட்டுப்படும்.
சில பெண்களுக்கு புதினாகூட குமட்டலை ஏற்படுத்தும். அவர்கள் புதினாவை தவிர்த்து விடுங்கள்.

9. குமட்டல் வாந்தி ஏற்படும் போதெல்லாம் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுங்கள். வாந்தி எடுக்கும் உணர்வைக் குறைக்கும். அதோடு இது வயிற்றுக்கும் நல்லது.

10. ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கப் வெந்நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறவிட்டு, வடிகட்டி, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனைச் சேர்த்து தினமும் காலையில் குடியுங்கள். குமட்டல், வாந்தி கட்டுப்படும்.

11. பீட்ரூட், எல்லா வகையான கீரைகள், சூப், பாதாம் பால் என்று சாப்பிடுவது நல்லது. காய்கறி பிடிக்காதவர்கள் கறி, சிக்கன், இறால் அளவாக சேர்த்து சாப்பிடுங்கள்.

12. எதுவாக இருந்தாலும், மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் வாந்தி, குமட்டல் போன்றவற்றை வராமல் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும்.

13. சில பெண்களுக்கு தொடர்ந்து வாந்தி, குமட்டல் வரும். எதைச் சாப்பிட்டாலும் நிற்காது. இவர்கள் உடல்நிலை பாதிப்பதற்குள் மருத்தவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.  

-உண்மை,16-30.11.16