வியாழன், 3 நவம்பர், 2016

மாதவிலக்கு கோளாறை தீர்க்கும் பண்ணை கீரை


பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை தீர்க்கும் பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உரு வத்தை உடையது. பண்ணை கீரை ரத்தக்கசிவை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது.
வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றுபோக்கை கட்டுப் படுத்த கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.
பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி வெள்ளை படுதல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.  பண்ணை கீரையின் 4 பூக்களை துண்டுகளாகி, இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைபோக்கு சரியாகிறது. கருப்பையில் ஏற்படும் புண்கள் ஆறும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவிலான ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
பண்ணை கீரையை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகுப் பொடி, நல்லெண்ணெய், உப்பு. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய் விடவும். எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் சேர்க்கவும். சிறிது பூண்டு தட்டிபோடவும். இதனுடன் பண்னை கீரை, மிளகுப்பொடி, உப்பு சேர்க்கவும்.
பின்னர், தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதை குடித்துவர கை,கால் வலி குணமாகும். கால்சியம், இரும்பு சத்து குறைபாடு நீங்கும். வயிற்றுகோளாறுக்கு மருந்தாகிறது. அதிக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது.  அதிக நன்மைகளை கொண்ட பண்ணை கீரையானது, ரத்த கசிவை கட்டுப்படுத்த கூடியது. இதில் கால்சியம், புரதச்சத்து உள்ளது. மலச்சிக்கலை சரிசெய்கிறது.
இந்த கீரையை அளவாக சாப்பிட வேண்டும். பண்ணை கீரையை பயன் படுத்தி முகப்பருவை போக்கும் மருந்து தயாரிக்கலாம். பண்ணை கீரையை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து முகப் பருவுக்கு மேல் போட்டால் பருக்கள் மறையும்.
கட்டிகளுக்கு மேல்பூச்சாக போடுவதன் மூலம் கட்டிகள் சீழ் பிடிக்காமல் குணமாகும். பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வெள்ளைப்போக்கு, மாதவிலக்கு பிரச்னைகளுக்கு பண்ணை கீரை மருந்தாகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. பண் ணை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கற்கள் கரையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும் பீர்க்கன்காய்

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், இளநரையை போக்க கூடியதும், அல்சரை குணப்படுத்த கூடியதுமான பீர்க்கன்காயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க கூடியது பீர்க்கன் காய். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல்பூச்சு மருந்தாகவும் பயன் படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுவதுடன், கல்லீரலுக்கு பலத்தை கொடுக்கிறது. பீர்க்கன்காயில் நீர்ச்சத்து உள்ளது. இதை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பீர்க்கன்காய், சீரகம். தோல் சீவிய பீர்க்கன்காய் துண்டுகள் 50 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் வீட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கல்லீரல் பலப்படும். இது மஞ்சள் காமலை வராமல் தடுக்கிறது. ஈரல் வீக்கத்தை சரிசெய்கிறது. பித்தத்தை குறைப்பதுடன் உடல் சூட்டை தணிக்கிறது. பீர்க்கன்காயை தோலுடன் பசையாக அரைத்து தலையில் பூசி சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்தால் இளநரை சரியாகும். பீர்க்கன்காயை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
வேகவைத்த பீர்க்கன் காய் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு, புளிப்பில் லாத தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய் துண்டு, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதை பீர்க்கன்காயுடன் சேர்த்து சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். கோடைகாலத்தில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். வயிற்று எரிச்சல், வலி போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். உடலுக்கு ஆரோக்கியம், பலம் தருகிறது.
பீர்க்கன்காய் தோலில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. செரி மானத்தை தூண்டுகிறது. பீர்க்கன்காய் தோலை பயன்படுத்தி துவையல் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, சீரகம், பூண்டு, வரமிளக்காய், வெங்காயம், சிறிதளவு புளி, பீர்க் கன்காய் தோல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பீர்க்கன்காய் தோலின் நிறம் மாறும்போது எடுத்து ஆறவைத்து அரைத்து எடுக் கவும். இதை தாளித்து மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், மலச் சிக்கல் பிரச்சினை சரியாகிறது. இது நச்சுக்களை வெளி யேற்றும் தன்மை கொண்டதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
-விடுதலை,13.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக