திங்கள், 27 நவம்பர், 2023

காந்தள், செங்காந்த மலர் ஒர் அலசல்

#காந்தள் , #செங்காந்தள் , 
                    #வெண்காந்தள்_மலர் :
                        🔥 ஓர் அலசல்🔥
                                  🧧🧧🧧

🧧#சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகையில் 
அனைத்து நூல்களிலும் 64 இடங்களில் 
இடம் பெற்றுள்ளது #காந்தள்மலர் .

🧧#பத்துப்பாட்டில், மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, நெடுநெல்வாடை நீங்கலாக மற்ற 7 நூல்களிலும் ,
12 இடங்களிலும் இடம் பெற்றுள்ளது.

🧧#தமிழ்நாட்டின் அரசுமலராகவும் 
இது ஏற்கப்பட்டுள்ளது.

🧧#கண்களைப் பறிக்கும் ஒளிரும் வண்ணங்களை உடைய கொடியினம் இது.. இத்தாவரத்தை ‘#கண்வலிப்பூ’ என்றும்
அழைக்கின்றனர். 

🧧#மேலும் இக்கொடியின் வேர்ப்பாகம் 
கலப்பையைப் போன்றிருப்பதால் இதைக்
 ‘#கலப்பைக்_கிழங்கு’ எனவும் அழைக்கின்றனர்.

🧧#இத்தாவரத்தின் கிழங்கினை கார்த்திகை 
மாதங்களில் தோண்டி எடுப்பதால் இதனை ‘#கார்த்திகைக் கிழங்கு’ எனவும் அழைப்பார்கள்.

🧧#இலக்கியங்கள் காந்தல் மலர்களை 
அடையாளம் காட்ட  கீழ்க்கண்டவாறு 
குறிப்பிடுகின்றன :

🧧*வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள்.

🧧*தீயின் அன்ன ஒண் செங்காந்தள்.

🧧*செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்.

🧧*கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்.

🧧*உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

🧧#சங்க இலக்கிய ஆசிரியர்கள்  காந்தள் மலரை அடைமொழியுடன் இருசொல் பெயரில் 
கீழ்கண்டவாறுபதிவு செய்துள்ளனர் 

🧧#அப்பெயர்களைக் கீழே காணலாம் :

*ஒண்செங் காந்தள்        கபிலர்
*கமழ்பூங் காந்தள்         கபிலர்
*நறவுகுலை காந்தள்      கபிலர்.
*நாறுகுலைக் காந்தள்     கபிலர்

*போது அவிழ் காந்தள்     மருதனார்.

*அலங்குகுலைக் காந்தள்  தங்காற் 
பொற் கொல்லனார்.

சினைஒண் காந்தள் ,மதுரைக் கணக்காயனார்.

*சுடர்ப்பூங் காந்தள்          நக்கீரர்.

*முகைஅவிழ்ந்த காந்தள்   கம்பூர் கிழான்.

*வள்இதழ்க் காந்தள்         பெருங்கௌசிகனார்

*தண்நறுங் காந்தள்          பரணர்

                            
🧧#சங்கஇலக்கியங்களில் காந்தள் பெயர் 
உள்ள  பாடல் அடிகள் : 

🧧#பத்துப்பாட்டு
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1.குறிஞ்சிப் பாட்டு
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம் - 62
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் - 196
பட்டினப்பாலை
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன - 153
மலைபடுகடாம்
தீயின் அன்ன ஒண் செங் காந்தள் - 145
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஒச்சி - 336
வளை உடைந்தன்ன வள் இதழ்க் காந்தள் – 519

2.பெரும்பாணாற்றுப்படை
நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் - 371,371

3.திருமுருகாற்றுப்படை
சுரும்பும் மூசாச் சுடர்பூங் காந்தட் – 143

4.சிறுபாணாற்றுப்படை
செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் – 167

5.பொருநராற்றுப்படை
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - 33
கொழுங் காந்தள் மலர் நாகத்து - 209

🧧#எட்டுத்தொகை
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

1.அகநானூறு:

நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தள் -4-15
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில் -18-15
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் -78-8
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் -92-9
வேங்கை விரிஇணர் ஊதி காந்தள் -132:11
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்  - 108:15
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தள் -138-17
கடவுட் காந்தளுள்ளும், பலஉடன் -152-17
போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் -238-17
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது -312-5
சினையொண் காந்தள் நாறும் நறு நுதல்- 338:7
உயர் வரை மருங்கின் காந்தள்அம்சோலைக்368:8

2.ஐங்குறுநூறு:

நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் - 226:2
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் -25:2
மலர்ந்த காந்தள் நாறிக் -259:5
சிலம்பு கமழ் காந்தள் நறுங்குலை அன்ன - 293:1
கலித்தொகை
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின் -39(3):15
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்  - 40(4):11
தகையவர் கைச் செறித்த தாள்போல் காந்தள்  - 43(7):8
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை- 45(9):2
உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன - 53(17):5
அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் - 59(23):3

3.குறுந்தொகை

குருதிப் பூவின் குலைக் காந்தட்டே  - 1.-4
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச் - 76-1
வேங்கையும் காந்தளும் நாறி - 84-4
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் - 100-3
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - 167:1
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் - 185:6
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் - 239:3
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்  -  259:2
காந்தள்அம்  கொழு முகை, காவல்செல்லாது - 265:1
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்    - 284:3
காலை வந்த முழுமுதற் காந்தள் - 361:4
காந்தள் அம் சிறுகுடிக் கமழும் - 373:7

4.நற்றிணை

மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல் - 14:7
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி - 17:10
நின்ற வேனில் உலந்த காந்தள் - 29:1
பறியாக் குவளை மலரொடு காந்தள் 34-2
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் - 85:10
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப - 161-7
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும் - 173:2
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் - 176:6
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து - 185:8
மெல் விரல் மோசை போல, காந்தள் - 188 -4
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் - 294:7
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள்
   கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் - 313:6,7
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்
   குலைவாய் தோயும் கொழு மடல் வாழை - 355:2,3
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக - 359:2
காந்தள்அம் கொழு முகை போன்றன சிவந்தே - 379:13
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தன்  - 399:2

5பதிற்றுப்பத்து
சிவந்த காந்தள் முதல்சிதை மூதில் - 15:11
அலங்கிய காந்தள் இலங்குநீரழுவத்து - 21:36
காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் - 30:9
மலர்ந்த காந்தள் மாறாதூதிய - 67:19
காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - 81:22

5.பரிபாடல்

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற - 8:26
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் - 11:20
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் - 14:13
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ--கார் தோற்றும்
    காந்தள் செறிந்த -18:34-35
கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள் - 19:76

6.புறநானுறு

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் - 90:1
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள் - 144:8
கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் - 168:2

7.முல்லைப்ப் பாட்டு *

 'கோடற் குவிமுகை அங்கை அவிழ' -முல்லைப் பாட்டு, வரி 95. கோடல்= காந்தள் ( நன்றி: பேரசிரியர் கு.இராமகிருட்டினன் பேராசிரியர் இராமகிருட்டினன் கு)

எனக்கூறப்பட்டுள்ளது. 

🧧#மேற்கண்ட ‘காந்தள்’ Gloriosa superba என்னும் தாவரவியல் பெயரைக் கொண்டதாகக்
கண்டறியப் பட்டுள்ளது.

🧧#காந்தள் மலரை அதன் தோற்றத்தை
ஒப்பு நோக்கி , கை விரலாகப் பாவித்து
கம்பன் தன் இராமகாதையில் இப்படிக்
குறிப்பிடுகிறான்.
"காந்தளின் மலர்ஏறிக் கோதுவ கவின் ஆரும்
மாந்தளிர் நறு மேனி மங்கை நின்மணிக்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின (2003)

🧧மேலும் சில இடங்களிலும் இந்த ஒப்புமையைக்
கையாண்டிருக்கிறான் கம்பன்.

🧧#காந்தள்மலர் #தமிழ்ஈழத்தின் தேசிய மலராக
அறியப்படுகிறது. மாவீரர்களுக்கு இம்மலர் மூலம்
அஞ்சலி செலுத்தப்படுகிறது.

🧧#தமிழ்நாட்டின் தனிச்சிறப்புமிக்க இம்மலர்
கார்த்திகைத் திங்களில் புத்துக்குலுங்குகின்ற
#குறிஞ்சி நிலப்பூவாகும்.

🧧#இம்மலர் மட்டுமல்லாமல் இதன்,செடி, தண்டு , 
வேர் ஆகியவை
மருத்துவ குணம் கொண்டவை என்றும் 
கூறப்படுகிறது.
.
🧧#இம்மாமலர் போற்றுவோம்.

          🔥(பல்வேறு தரவுகளின் தொகுப்பு இது)🔥
                              🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

                           ⚖️ #துலாக்கோல்/28.11.2023⚖️

வியாழன், 27 ஏப்ரல், 2023

காய்கறிகளும் - உடல் உறுப்புகளும்

 

13

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் காய்கறி களும் ஒரே மாதிரி இருக்கும். அவை தொடர்பாக சில சுவையான தகவல்களோடு  அவைகளை சாப்பிடுவது குறிப்பிட்ட அந்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியத் திற்கு மேலும் நன்மை பயக்கும்.  

 1. கண்

வட்ட வடிவத்தில் சிறு துண்டுகளாக வெட்டப் பட்டிருக்கும் கேரட், மனிதனின் கண் போல் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? கூர்ந்து பார்த்தால் கேரட், கண்களின் உள் அடுக்குகளை ஒத்திருப்பது தெளிவாக தெரியும். கேரட், அதில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்ற தாவர இரசாயனத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தை பெறுகிறது. இந்த பீட்டா கரோட்டின் என்பது கண்புரை உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. தெளிவான கண் பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது. 

2. இதயம்

தக்காளி இதயத்தை போல் சிவப்பு நிறம் கொண்டது. தக்காளி, இதயத்தின் உள் அமைப்பை போலவே நான்கு அறைகளை கொண்டது. தக்காளியில் இருக்கும் லைகோபின், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் சி, தக்காளியில் நிறைந்திருக்கிறது. உயர் குருதி அழுத்த பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் தக்காளி சாப்பிடலாம். 

3. நுரையீரல் காற்றறைகள்

நுரையீரலின் கட்டமைப்பு சிறிய காற்றுப்பாதைகளை கொண்ட கிளைகளை உள்ளடக்கியது. அவை அல்வி யோலி எனப்படும் திசுக்களால் ஆனவை. இது பார்ப் பதற்கு திராட்சைக் கொத்து போல காட்சியளிக்கும். இந்த கட்டமைப்புதான் நுரையீரலில் இருந்து ஆக்சி ஜனை குருதி ஓட்டத்திற்கு எடுத்து செல்ல அனுமதிக் கின்றன. திராட்சை பழம் அதிகம் சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். திராட்சை விதை களில் புரோஆந்தோசையானிதின் என்ற வேதிப்பொரு ளும் உள்ளது. இது ஒவ்வாமை காரணமாக ஏற்படும் ஆஸ்துமா பிரச்சினையை குறைக்க உதவும்.

4. சிறுநீரகம்

கிட்னி பீன்சின் பெயர் முதல், வடிவம் வரை அனைத்தும் சிறுநீரகங்களை ஒத்திருக்கும். சிறுநீரக கற்களைத் தடுப்பதற்கு கிட்னி பீன்ஸ் சிறந்த உண வாக கருதப்படுகிறது. சிறு நீரகங்களின் சீரான செயல் பாட்டுக்கும் துணைபுரியும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வும், மலச்சிக்கலை தடுக்க வும் உதவும். 

5. கருப்பை

கருப்பையின் வடி வத்தை போலவே அவ கொடா பழத்தின் உள் பகு தியும், விதையும் அமைந்தி ருக்கும். கருப்பை மற்றும் கருப்பை வாய்ப் பகுதியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவகொடா உதவும். வாரம் ஒருமுறை அவ கொடா சாப்பிடுவது பிறப்பு ஹார்மோன்களை சம நிலைப்படுத்த உதவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கவும் துணைபுரியும். 

6. மூளை

வால்நட்டின் உள்பகுதி பார்ப்பதற்கு மூளை போலவே காட்சியளிக்கும். பெருமூளை மற்றும் சிறுமூ ளையில் காணப்படும் சுருக்கங்கள், மடிப்புகளையும் ஒத்திருக்கும். மூளைக்குள் மூன்று டஜன் நியூரான்-டிரான்ஸ்மிட்டர்களை உருவாக்க வால்நட் உதவும். மேலும் வால்நட்டில் இருக்கும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத் தவும் செய்யும். 

7. கணையம்

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். இது கணையம் உள்பட உடலில் உள்ள அனைத்து திசுக்களையும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. 

8. வயிறு

இஞ்சியின் வடிவம் வயிற்றின் குடல் பகுதியை ஒத்திருக்கும். பெருங்குடல் பாதிப்பு, வயிற்றுபோக்கு, வாயு பிரச்சினை, குமட்டல், பசியின்மை உள்பட பல் வேறு வகையான வயிற்று பிரச்சினைகளுக்கு இஞ்சி நிவாரணம் தரும். செரிமானத்திற்கு உதவுவதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களும், சீனர்களும் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக வயிறு சார்ந்த பிரச்சி னைகளுக்கு இஞ்சியை அருமருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கசப்பான பாகற்காயின் இனிப்பான தகவல்கள்!

 


2022 ஜூன் 16-30 2022

சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காயில் மிதிபாகல், கொடிப் பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன. பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் கட்டுக்குள் வைக்கும். தினமும் பாகற்காய் சாற்றோடு, சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும். சொறி, சிரங்கு இருந்தால் ஆறிவிடும்.
பாகற்காய் சாறு, தேன் சிறிது கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, ரத்த சோகை, காச நோய் கட்டுக்குள் வரும். நிவாரணம் கிடைக்கும்.
பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடிபோட்டுப் பிசறி சிறிதுநேரம் கழித்து எடுத்துப் பிழிந்தால் கசப்புச் சுவை போய்விடும். பிறகு சமைக்கலாம்.
நறுக்கி, மோரில் உப்பு சேர்த்து ஊற வைத்து, காய வைத்தால் சுவையான பாகற்காய் வற்றல் தயார். சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது கடலை மாவு, அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்துப் பிசைந்து, போண்டாவோ, பக்கோடாவோ செய்யலாம்.
மற்ற ஊறுகாய்கள் செய்வது போன்றே, பாகற்காயிலும் ஊறுகாய் செய்யலாம். பல மருத்துவ குணங்கள் நிறைந்த பாகற்காயை விதவிதமாகச் சமைத்து சாப்பிட்டால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

முருங்கையின் பயன்கள்!

 

உணவே மருந்து! : முருங்கையின் பயன்கள்!

2022 மருத்துவம் ஜூன் 1-15 2022

முருங்கைக்காய்
முருங்கையில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச் சத்து ஆகியவை உள்ளன.
பெண்கள் வாரம் ஒருமுறை முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அடி வயிற்றுவலி, மேகநோய், ரத்தச்சோகை சரியாகும். மலச்சிக்கலைக் குணமாக்கும் ஆற்றல் முருங்கைக்காய்க்கு உண்டு. உடல் சூட்டைக் குறைக்கும். மூலநோய் உள்ளவர்கள், முருங்கைக்காயை நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
முருங்கைக்காயில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். பித்தப்பை சீராகச் செயல்பட உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. சளி, ஆஸ்துமா, இழுப்பு மற்றும் சுவாசம் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாகச் செயல்படும்.
முருங்கை கீரையின் பயன்கள் கோடி..!
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் விலகியே இருக்கும். முருங்கை இலையில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த சோகை, இருதய நோய்கள், மூட்டு வலிகள், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், செரிமானக் கோளாறு உள்ளிட்ட-வற்றைக் குணப்படுத்தும்.
கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி ஆகியவை நிறைந்திருக்கின்றன. முருங்கைக் காய், இலை, பூ மட்டுமன்றி, பட்டை, வேர், விதை, பிசின் ஆகியவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்ப காலத்தி-லேயே நீரிழிவு நோய் அறிகுறிகளில் இருந்து முற்றிலும் காப்பாற்றும். முருங்கை இலை, விதை, வேர் இவற்றில் காயங்களை ஆற்றும் தன்மைகள் உள்ளன. காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது. முருங்கை இலையைப் பொடி செய்து உண்டு வந்தால், அதில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் செல்களில் சேதத்தை தடுக்கிறது. மன அழுத்தம், வீக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது – உயிர் அணுக்கள் சேதமா-வதைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கை இலைப் பொடியில் பல்வேறு வகையான அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால் இதய நோய்கள் ஈ ஆர்த்தரிட்டிஸ், எடை அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்குத் தீர்வாக உள்ளது.முருங்கை இலைப் பொடி மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
முருங்கைப் ‘பூ’வின் மருத்துவப் பயன்கள்
முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இரு வேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்புத் தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூ கொதிநீர் வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
முருங்கைப் பிசின்
உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. முருங்கைப் பிசினை ஒன்றிரண்டாகப் பொடித்து, நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூளை இரவு நேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டால், உடல் வலுப்பெறும்.
நாம் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத் தேவையில்லை அதிகாலை ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கைப் பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழ உணவை காலை உணவாக எடுத்து வந்தீர்கள் என்றால் அற்புதமான உடற்கட்டு, உடல்வாகு கிடைக்கும்.ஸீ

சனி, 15 ஏப்ரல், 2023

புளிச்சக்கீரையின் பயன்கள்!

 

உணவே மருந்து

மே 1-15,2022

புளிச்சக்கீரையின் பயன்கள்!

தென்னிந்தியாவில் அதிலும் பயன்படுத்தப் படும் கீரைகளில் புளிச்சக்கீரையும் ஒன்று. குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் புளிச்சக்கீரையை அதிகம் தங்கள் உணவில் விரும்பிச் சேர்க்கிறார்கள்.

புளிப்புச் சுவை அதிகமாக இருப்பதால் புளிச்சக் கீரை என்று அழைக்கப்படும் இக்கீரையின் புளிப்புத்தன்மை நம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடல் வளர்ச்சிக்கும் இந்த புளிப்புச் சுவை மிகவும் அவசியம்.

புளிச்சக்கீரையில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுச் சத்துகளும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் ‘சி’, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. அது மட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடென்ட் என்று சொல்லக்கூடிய Flavonoids, Anthocyanin   மற்றும் Poly Phenolic acid போன்றவை இருப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. தினந்தோறும் நமது சுற்றுச்சூழலில் உருவாக்கப்படும் தூசுகள், கழிவுகள் போன்ற மாசுபாடுகளால், நம் உடல் செல் அணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் கீரையை உட்கொள்வதால் இந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்தக் கீரையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இச்சத்து செரிமான ஆற்றலை அதிகரித்து மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு கோளாறுகள் வராமல் தடுக்க உதவுகின்றன. அது மட்டுமின்றி, குடலின் ஆரோக்கியத்தையும் அதில் சுரக்கப்படும் சுரப்பின் அளவையும் அதிகரிப்பதால் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள இரும்புச்சத்து நம் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையால் ஏற்படும் அசதி, படபடப்பு, உடல்சோர்வு, மூச்சு வாங்குதல் போன்ற கோளாறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்தக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடோடு வைத்திருக்க உதவியாக இருக்கிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள பொட்டாசியம் ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ஓய்வினைக் கொடுத்து, உயர் ரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தும் கலோரியும் குறைவாகவும்,  நார்சத்து அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் பசியில்லாமல் இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தக் கீரையில் அதிகளவு உள்ள வைட்டமின் ‘ஏ’ கண்பார்வை அதிகரிக்கச் செய்வதுடன், கண்புரை ஏற்படாமலும்  தடுக்கிறது. இந்தக் கீரையிலுள்ள புளிப்புச் சுவை, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தோலில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும், அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் நல்ல தீர்வாக உள்ளது. அது மட்டுமின்றி இதிலுள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புக்களால் கூந்தலின் பொலிவு அதிகரிப்பதுடன் முடி உதிர்வதும் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் ஈறுகளின் ரத்தக் கசிவைத் தடுப்பதோடு, எலும்பை வலுவாக்கவும்,   உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்து, நோய் வராமல் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது’.’ ஸீ

ஞாயிறு, 19 மார்ச், 2023

"வாட்ஸ் அப்" - "யுடியூப்" பார்த்து மூலிகை மருந்து என்று கண்டதைச் சாப்பிடாதீர்கள்!

 



நவீன தொழில்நுட்பங்கள்  நாம் அறியாத பல உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதில் ஒன்று அலைபேசியில் வரும் `வாட்ஸ் அப்' மற்றும் `யுடியூப்' மருத்துவங்கள். பலர் தேவையே இல்லாமல் `முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல' என்ற தொனியில் எங்க பாட்டன் அதைச் சாப்பிட்டான், எங்க பூட்டன் இதைச் சாப்பிட்டான் என்று கூறி கிழங்கு மற்றும் இலை தழைகள் போன்றவற்றைச் சாப்பிடச்சொல்வார்கள். 

சிலர்  இதை  அப்படியே நம்பிச் சாப்பிட்டுவிடுகிறார்கள். இப்படித்தான் சிலநாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில்  செங்காந்தள் பற்றி `யுடியூப்'பில் யாரோ கூறியதைக் கேட்டு அதை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் குறித்த செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிகழ்வில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம் - செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? 

மருத்துவத்தை பொறுத்தவரை இரண்டு விஷயங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உணவுப் பொருளை மருந்தாக எடுத்துக்கொள்வது என்பது வேறு; மருந்துப்பொருளை உணவாக எடுத்துக்கொள்வது என்பது வேறு. விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற மிளகு, சீரகத்தை மருந்துப்பொருளாக சாப்பிட்டால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. தவிர, அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற அளவும் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், செங்காந்தள் கிழங்கு என்பது மூலிகை மருந்து. அந்த மருந்துப்பொருளை உணவுப்பொருளாக நினைத்துக் கொண்டு சாப்பிட்டதுதான் ஒருவரை மரணம் வரை கொண்டு சென்றிருக்கிறது.

செங்காந்தளில்  சயனைட் மூலக்கூறு உள்ளது. இந்தப் பொருளை நவீன முறையில் பிரித்தெடுத்து மருந்துவப் பொருளாக பயன்படுத்துகின்றனர். நவீன மருத்துவத்தில் வெளி நோய் மற்றும் உள் நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இவ்வளவு அளவுதான் பயன்படுத்த வேண்டும் என்கிற அளவு இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பல அளவுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு மிகக்குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.

உணவுப் பொருள்களான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்குபோல ஒரு மூலிகைக்கிழங்கை சாப்பிட்டால், அது எப்படிப்பட்ட பின்விளைவையும் ஏற்படுத்தலாம்.  ஆனால் செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டு இறந்த இளைஞருக்கு செங்காந்தள் கிழங்கு  உடலின் இரத்த ஒட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுநீரகம் உள்ளிட்ட உள் உறுப்புகள்  ஒரே நேரத்தில் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்காத எந்தவொரு மூலிகையையும், "யூடியூப்" பார்த்தோ, "வாட்ஸ்ஆப்" பார்த்தோ தயவுசெய்து சாப்பிடாதீர்கள். முக்கியமாக மூலிகை பலன்கள் என்ற பெயரில் தகுதி இல்லாதவர்கள் கூறுவதைச் சாப்பிட்டு ஆபத்தில் சிக்கவேண்டாம்.

-------------------------------------------+++++++++++++++++_-----------------------------




உள்ளூர் செய்திகள்

 திருப்பத்தூர்

 செங்காந்தள் கிழங்கை தின்றவர் சாவு 

Byமாலை மலர்13 நவம்பர் 2022 2:38 PM 

சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து விபரீதம் போலீசார் விசாரணை ஆம்பூர்: ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 26). அவரது நண்பர் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 45). இவர்கள் இருவரும் விண்ணமங்கலம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் செங்காந்தள் பூச்செடி கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து இருவரும் செங்காந்தள் செடியை பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர் . இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக லோகநாதனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் . ரத்தினம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . கிழங்கை தின்றவர் சாவு He who eats yam will die 

https://www.maalaimalar.com/news/district/tamil-news-kanyakumari-mp-vijay-vasant-participates-in-nehruyuvakendra-organisations-cultural-function-585481?infinitescroll=1