ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தேயிலை - பருமனை குறைக்குமா கிரீன் டீ

பல தரப்பினரும் கொண் டாடும் கிரீன் டீ  உண்மையில் உடலுக்கு நன்மை செய் கிறதா? அதை எவ்வாறு அருந்த வேண்டும்? ஒரு நாளைக்கு எத்தனை  முறை பருகலாம்? என்பது குறித்து உணவியல் நிபுணர் அபிநயாராவ் கூறியிருப்பதாவது:- கமீலியா சினஸிஸ் என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது.
முதன்முதலில் சீனாவில்தான் கிரீன் டீ பழக்கம்  தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது.  கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உடல்நலம் குறித்த அக் கறையும், கிரீன் டீக்கு  பெரிய அளவில் செய்யப்படும் விளம் பரங்களும்தான் முக்கிய காரணம். கிரீன் டீ ஆன்டி ஆக்சிடென்ட் ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ் எனப்படும் நச்சுப்பொருட்கள் செல்களை பாதிக்காமல்  தடுக்கிறது. ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் தங்கிவிடும்.
இதனால் பருமன்  ஏற்படும். போதுமான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை  வெளியேற்றும். இதனால், உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது. கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன் டீக்கு உண்டு.
இதனால்தான் எடை அதிக முள்ளவர்களுக்கு கிரீன் டீ  குடிக்கச் சொல்லி அறிவுறுத்து கிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம். பொதுவாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரீன் டீ  குடிக்கலாம்.உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள், பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது  என்பதால், சமச்சீர் உணவு அவசியம்.
வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக் கூடியவை. கிரீன் டீயை சுடுநீரில் மூழ்கச் செய்து, அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது. அதிகபட்சம் 3 விநாடிகளுக்கு மேல் டீ  பைகளை நீரில் மூழ்கச்செய்யக் கூடாது.
சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிப்பார்கள். இதனால் கிரீன் டீ உடலை டீடாக்ஸ் செய்து  நச்சுகளைவெளியேற்றும் தன்மையை இழந்துவிடும். எதுவும் கலக்காமல் லேசான துவர்ப்புத் தன்மையுடன் கூடிய கிரீன் டீ குடிப்பதே நல்லது.  இருப்பினும், சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து குடிக்கலாம்.
இது நச்சுகளை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் மட்டுமே குடிக்க வேண்டும். ஒரு கப் என்பது 150 முதல் 200 மி.லி. வரை மட்டுமே.
அளவுக்கு  மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே? கிரீன் டீயிலும் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதிகமாக கஃபைன் உடலில் சேர்ந்தால்  உணர்வூக்கியாகச் செயல்பட்டு தூக்கம் வருவதைக் கெடுக்கும். மனநலம் சார்ந்த பல பிரச்சினைகளைஉருவாக்கும்.
-விடுதலை16.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக