சனி, 7 ஜனவரி, 2017
காய்கறி நல்லதே கீரை நல்லதே பழம் நல்லதே என்றாலும் பார்த்தே சாப்பிடணும்!
வியாழன், 29 டிசம்பர், 2016
தினமும் ஒரு நெல்லிக்கனி
கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால், உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும். இதை தடுக்க வைட்டமின் சி நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.
நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு (இரண்டு நெல்லிக்காய்) மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கலாம். இதயக்கோளாறு, நரம்பு தளர்ச்சி, இளநரை இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வரலாம்.
கீல்வாதம், நரம்பு தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாக பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடிக்கலாம். நெல்லிக்கனியை உலர்த்தி பொடியாக்கி உடம்பில் தேய்த்துக் குளித்தால் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.
உலர் நெல்லியை நீரில் போட்டு ஊற வைத்து கண்களை கழுவி வர, கண் நோய்கள் குணமாகும். வாய்ப்புண் குணமாக நெல்லி இலையை சிறிது எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்ப ளித்தால் போதும்.
நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை முடி மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் தொடர்ந்து குளித்து வர நரை முடி மறையும்.
நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி நன்கு ஊறியதும் குளித்தால் முடி நன்கு செழித்து வளரும். இதில் முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும். நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும். நெல்லிச்சாறுடன் தேன் கலந்து குடிக்க சளி, தும்மல் நீங்கும்.
பாலில் நெல்லிப்பொடியை கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய் விட்டு கலக்கி குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும். நெல்லிச்சாறுடன் சந்தனம் அரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.
நெல்லிச்சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும். நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது.
உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். நெல்லி வற்றலுடன் வில்வ இலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.
-விடுதலை,14.7.14
புதன், 30 நவம்பர், 2016
இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை!
பிரண்டை இந்தியா, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடி இனத் தாவரமாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பலவகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
தமிழில் பிரண்டை எனச் சொல்லப்படும் இந்த மூலிகையை ஆங்கிலத்தில் போன்-செட்டர் (Bone Setter) என்கிறார்கள். சிலர் உடல்மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள்.
இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு தேறும்.
வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவை-யின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும்.
பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் மாறி, மூலநோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
வாயு சம்மந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் செரிமான சக்தியைத் தூண்டும். செரியாமையை போக்கும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின்மீது வைத்துக் கட்டியும், பிரண்டையைத் துவையலாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். முறிந்த எலும்புகள் விரைவில் இணைந்து பலம் பெறும்.
ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படும்.
இப்படிப்பட்ட கோளாறுக்கும் பிரண்டைத் துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலம் பெறும். பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியும், முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளில்-கூட பிரண்டை சேர்க்கப்படுகிறது.
பிரண்டையின் வேறு பெயர்கள், கிரண்டை அரிசினி, வச்சிரவல்லி.
தாவரப் பெயர்: VITTIS Gvandrangularis.
தாவரக் குடும்பம்: VITACEAE.
-உண்மை இதழ்,1-15.11.16
ஞாயிறு, 27 நவம்பர், 2016
மருத்துவ தன்மை கொண்ட கொண்டைக்கடலை
தேவையற்ற சதையை குறைக்கும் சோம்பு கீர்
திங்கள், 21 நவம்பர், 2016
பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?
பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா?
தோல்கள் என்றாலே அவை தேவை யற்றவை என்று நாம் மனதில் பதிந்து போன தன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத் துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங் களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும்.
ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசி யம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக் களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளி களுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால் தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதி கரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க் கரை உடனே அதிகரிக்கும் தீமையையும் ஏற்படுத்தும்.
தோலுள்ள ஆப்பிளில் உள்ள சத்துக்கள் விவரம்: நார்ச்சத்து 5 கி., கால்சியம் 13 மி.கி., பொட்டாசியம் 239 மி.கி.; தோல் நீக்கப்பட்ட பழத்தில் உள்ள சத்துக்கள்: நார்ச்சத்து 3 கி., கால்சியம் 11 மி.கி. பொட்டாசியம் 194 மி.கி.
கொய்யாப் பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படு கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக் கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு.
சப்போட்டா பழத் தோலில் உடலில் காயங் களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப் பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குண மும் இவற்றுக்கு உண்டு. எனவே, உடலில் ஆறாத புண் உள்ளவர்கள் இதைத் தினமும் சாப்பிட்டுவந்தால் புண்கள் விரைவில் ஆறும். நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்து வரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.
வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிக ரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டு பண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப் படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப் பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம்.
இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற் றும் கால்சியம் சத்துக்கள் மிகுந் துள்ளன. எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக் காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட் சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதி லுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக் கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்து விடும்.
தவிர பழங்களைச் சாறாக்கி, பால், சர்க் கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல் பையே குலைத்துவிடும். செரிமானக் கோளா றையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங் களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதே நேரம், எந்தப் பழம் என்றாலும் தண் ணீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த பிறகே சாப்பிடவும் சமைக்கவும் செய்ய வேண்டும்.
ஆர்கானிக் பழங்களே நல்லவை!
இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டுப் பழங்களானாலும் சரி, வெளிநாட்டுப் பழங் களானாலும் சரி, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப் படுகின்றன. இப்பழங்களில் இந்த வேதி நச்சுகள் இறங்கிவிடுகின்றன. மேலும், இவை சந்தையில் விற்பனைக்கு வரும்போது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும், சில பழங்கள் விரைவில் பழுத்துவிடாமல் இருக் கவும், பழங்களின் தோலில் பலதரப்பட்ட வேதிப்பொருட்களைத் தடவுகிறார்கள்.
இவை நம் ஆரோக்கியத்துக்குக் கேடு செய்கின்றன. இவற்றைக் கழுவினாலும் இந்த வேதிப்பொருட்கள் முழுவதுமாக நீங்க வழியில்லை என்றே அறிவியலாளர்கள் கருது கிறார்கள். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிட விரும்புபவர்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் வகைப் பழங்களைப் பருவத்துக்கு ஏற்பச் சாப்பிடு வதே நல்லது.
-விடுதலை,21.11.16
வியாழன், 3 நவம்பர், 2016
மாதவிலக்கு கோளாறை தீர்க்கும் பண்ணை கீரை
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், இளநரையை போக்க கூடியதும், அல்சரை குணப்படுத்த கூடியதுமான பீர்க்கன்காயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.