வியாழன், 30 மே, 2019

பிடல் காஸ்ட்ரோவும், முருங்கைக் கீரையும்...

2010ஆம் ஆண்டு கியூபாவின் அண்டை நாடான ஹைட்டி தீவில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதியில் நின்றார்கள். அப்போது பிடல் காஸ்ட்ரோ முதுமையின் காரணமாக அரசியலில் இருந்து விலகியிருந்தார். அப்படியிருந்தும் பூகம்பத்தால் பாதித்த மக்களுக்கு உதவ நினைத்தார். மருத்துவர்களையும், தன் னார்வ தொண்டர்களையும் அங்கே அனுப்பிவைத்தார்.


அவர்கள் ஹைட்டி தீவில் பூகம்பத்தால் அதிக மக்கள் இறந்துவிட்டார்கள் என்றும், அதோடு கூடவே காலரா நோய் வேகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவித்தார்கள். பிடல் காஸ்ட்ரோ அப்போது அதிபராக இல்லாத போதும், உயர்மட்ட மருத்துவ குழுவினரை அழைத்துப் பேசினார். காலரா நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? அதற்கு தீர்வு என்ன? என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, பின்லே இன்ஸ்டிடி யூட் மருத்துவ ஆராய்ச்சி மய்ய மருத்துவர் கெம்பா ஹெர்கோ, இந்தியாவிலுள்ள முருங்கை இலைக்கு காலராவை தடுக்கும் எதிர்ப்பு சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது என்று கூறினார்.

உடனே ஹெர்கோ தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை காஸ்ட்ரோ இந்தியா விற்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழு முதலில் வந்த இடம் தமிழ்நாடு. முருங்கை சாகுபடி, அதன் மருத்துவ பயன்கள் போன்ற வற்றை கேட்டறிந்தார்கள். அதன்பின் கேரளா, ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் சென்று மேலும் தகவல்கள் திரட்டினார்கள். ஹைட்டி மக்களுக்கு முருங்கைக் கீரையை இறக்குமதி செய்து கொடுத்தார்கள். கால ராவும் கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து அதன் இலைகளை கீரையாய் செய்து சாப்பிடுங்கள் என்று காஸ்ட்ரோ அறிவுரை கூறினார்.

கியூபா அரசும் தனது மக்களை முருங்கை மரம் வளர்க்கச் சொல்லி அறிவு றுத்தியது. காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஏராளமான முருங்கை மரங்களை வளர்த் தார். அவற்றை பராமரிக்கும் வேலையை யும் அவரே செய்தார். முருங்கைக்கீரையை தனது உணவில் தினமும் சேர்த்து வந்தார். தனது ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்புக்கு இந்திய முருங்கைக் கீரை காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

தன்னுடைய தோட்டத்தில் மட்டுமல் லாது கியூபா முழுவதுமே முருங்கை மரங்கள் நடப்பட்டு, அதன் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவற்றை மக்கள் உணவாக உட்கொண்டு வருகின்றனர். அதற்கு பிடல் காஸ்ட்ரோ மேற்கொண்ட முயற்சியே காரணம்.

- நன்றி: ஜனசக்தி மே 12-18, 2019

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக