செவ்வாய், 9 மே, 2017

மாதவிலக்கின்போது வாந்தி, வயிற்றுவலி - எளிய தீர்வு!


13 முதல் 14 வயதில் பெண்கள் பருவம் அடைவர். அதாவது முதல் மாதவிலக்கு வருவதையே நாம் பருவம் அடைதல் என்கிறோம்.

ஆனால், தற்போது இரசாயனம் கலந்த பாக்கெட் உணவுகள், மைதா, பரோட்டா, செயற்கை பானங்கள் சாப்பிடுவதால், பெண் பிள்ளைகள் 10 வயதிலேயே பருவம் அடையும் அவலம்! எட்டு வயதில் பருவம் அடையும் அதிர்ச்சியான நிகழ்வுகளும் நிகழ்கின்றன.

எனவே, பாரம்பரிய உணவுகளை உண்டு, செயற்கை உணவுகளை விலக்குவதே இந்த அவலங்கள் அகல ஒரே வழி.

மாதவிலக்கின்போது சில பெண்களுக்கு வயிற்றுவலி கடுமையாக இருக்கும்! சாப்பிட முடியாது, நடக்க முடியாது. வாந்தியும் வரும்; வயிற்றைப் புரட்டும்.

இரண்டு நாள்கள்கூட இது நீடிக்கும். இதற்கு ஆங்கில மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நிவாரணம் பெறுகின்றனர். இது மிக மிகத் தவறு. ஆங்கில மருத்து சாப்பிடுவது பல பாதகமான பக்க விளைவுகளை உண்டாக்கும்.

இவ்வாறு வலியும் வாந்தியும் வருவது திருமணம் ஆனபின் பெரும்பாலும் நீங்கி விடும்.

சரியான தீர்வு என்ன?

மாதவிலக்கின்போது வயிற்றுவலி, வாந்தி, அசதி வந்து, சாப்பிட முடியாத நிலை தொடங்கும்போதே,

நற்சீரகத்தை பொன்வறுவலாக வறுத்து, அதைத் தேவையான அளவுத் தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சினால் கஷாயம் கிடைக்கும். அதில் எலுமிச்சைச் சாற்றை லு தேக்கரண்டி கலந்து லு டம்ளர் குடித்தால் உடனே குணமாகும். மீண்டும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரு டம்ளர் அளவு பருகினால் உடல் நலமாகும். இதனால் பக்க விளைவுகள் ஏதும் வராது. உடல் நலம் பெறும். பொதுவாகப் பெண்கள் பத்து வயது முதலே, சோற்றுக் கற்றாழைச் சோற்றை எடுத்து ஏழுமுறைத் தண்ணீரில் அலசியபின், அத்துடன் தேவையான அளவு தேன் சேர்த்து, தினம் அய்ந்தாறு துண்டுகள் சாப்பிட்டால் பெண்களுக்கு பலப் பிரச்சினைகள் வராது காக்கும்.

பெண்கள் உளுந்து வடை, களி, இட்லி இவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கறிவேப்பிலையைப் பொடியாகவோ, துவையலாகவோ நிறையச் சாப்பிட வேண்டும். விதையில்லாப் பழங்களைத் தவிர்த்து, விதையுள்ள நாட்டுப் பழங்களைச் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் வாரம் மூன்றுமுறை சாப்பிட வேண்டும்.

எள் சேர்த்த இனிப்பு உருண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது.

கீரைகள், பேரீச்சம்பழம் நிறையச் சாப்பிட்டு இரத்தச் சோகை வராமல் தடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் உடல்நலம் பெறுவதோடு, குழந்தையின்மை என்ற சிக்கல் வராது.

செயற்கை உணவுகள் உண்டால் குழந்தை உருவாகும் வாய்ப்பு பெருமளவு குறையும். எனவே, மேற்கண்ட பாரம்பரிய உணவுகளைத் தவறாது உண்டு, செயற்கை உணவுகளை விலக்கி, வளமோடு வாழுங்கள்!   
-உண்மை இதழ்,1.15.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக