ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நன்னாரி - பித்தக் கோளாறு போக்கும் நன்னாரி


நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி என்று நன்னாரியில் 4 வகைகள் உள்ளன. இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது.
அந்த வகையில் நன்னாரி  வளரும் கொடி வகையை சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
முக்கிய வேதியப் பொருள்கள்:
இலைகளிலிருந்து ரூட்டின், வேர்களிலிருந்து ஹெக் ஸாட்ரை அக்கோன்டேன், லூபியால், ஆல்பா அமரின், பீட்டா அமரின், இட்டோஸ்டிரால் ஆகியவற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. வேர், பட்டை, மற்றும் இலைகள் பயன்தரும் பாகங்களாகும்.
பயன்கள்: சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன் படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் வெப்பத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
-விடுதலை,13.4.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக