திங்கள், 10 டிசம்பர், 2018

நிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்



டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல நன்மைகளைச் செய்யும் திறனும் கொண்டது நிலவேம்பு என்று புகழ்கிறார்கள் மாற்று மருத்துவர்கள்.

* கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் என ஏதாவது இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். அது பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். (வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்துக்கு உகந்தது.) காய்ச்சிய பிறகு, 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் 15 மிலியும், பெரியவர்கள் 30 மிலியும் சாப்பிடலாம்.

* எந்த விஷக்காய்ச்சலாக இருந்தாலும் நில வேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரசையும் முழுமை யாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டு வலியும் காணாமல் போய்விடும்.

* நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. காய்ச்சலுக்காக ஏற்கெனவெ ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், நிலவேம்பு குடிநீரும் எடுத்துக் கொள்வது உங் களுடைய ஆரோக்கியத்தை விரைவில் உறுதி செய்து நோயிலிருந்து விடுதலை தரும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும்.

* வாத மிகுதியால் ஏற்பட்ட காய்ச்சல், தலை நீரேற்றம், உடல்வலி ஆகியன போகும். பல்வேறு வகையான காய்ச்சலோடு அது தொடர்பான தொல்லைகளையும் காத தூரம் ஓட்டிவிடும்.

* குழந்தைகளின் வயிறு தொடர்பான கோளாறுகள், மண்ணீரல் வீக்கம், சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்றுநோய்கள் ஆகிய பிரச்சினை களுக்கும் தீர்வு தருகிறது நிலவேம்பு.

* நிலவேம்பு மனித சமூகத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் எச்.அய்.வி. என்ற மூன் றெழுத்தால் குறிப்பிடப் பெறும் மிக மோசமான உடலையும் உள்ளத்தையும் கெடுத்து உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பால்வினை நோய்க்கு பலமான எதிரியாகச் செயல்பட்டு எதிர்த்து நின்று போராடி குணம் தரவல்லது.

* டெங்கு காய்ச்சல் மனித உடலில் உள்ள தட்டணுக்களை குறைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கிறது. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை காத்து உடலிலுள்ள நீர்சத்து குறைபாட்டை சரிசெய்து உடலை காக்கிறது.

* பொதுவாக நாம் பயன்படுத்தும் நிலவேம்பு குடிநீர்   என்ற நீர்ம வடிவத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலின் செயல்பாடுகள் மாறாமல் நோயிலிருந்து காத்து உடலை நல்ல நிலையில் வைப்பது இதன் சிறப்பம்சம்.

* நிலவேம்பினால் மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பதெல்லாம் எந்தவித ஆதார மும் இல்லாத வதந்திதான். நிலவேம்புக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கிளப்பும் வீண்வம்பு அது. அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த பிறகே நிலவேம் பினை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அச்ச மின்றி பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரைப் பயன் படுத்தலாம்.

எலும்பை பலப்படுத்தும்


பிரண்டை


பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. எலும்பு பலவீனமான வர்கள், எலும்பு முறிவு உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தலாம். வாய்வு பிடிப்பு, கை கால் குடைச்சல் உள்ளவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படும் போது பிரண்டையை சூப்பாக செய்து சாப்பிட்டால், அந்த பிரச்சினையைத் தீர்க்கும் தக்க மருந்தாக அமையும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. பிரண்டையில் உடலுக்குத் தேவையான முழுமையான கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. இது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 10.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக