வெள்ளி, 28 செப்டம்பர், 2018

புத்திக் கூர்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய்



வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ் பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய் கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவித மான தாவர பசைப் பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப் பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக் காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.  வெண்டைக்காய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் சிறப்பான குணமே வழவழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் வழவழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும் போது இந்த அமிலங் கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங் கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி சுத்தமான பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பி யவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய் நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப் பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தி னால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச் சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப் படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதி கரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக