புதன், 11 ஏப்ரல், 2018

உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி




இஞ்சித் துவையலை ருசி பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன் படுத்திக் கொள்கிறோம்.

பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க் கிறார்கள். இஞ்சிக்கு உஷ்ணப் படுத்தும் குணம் உண்டு. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை தரும். ஞாபக சக்தியை வளர்க்கும்.

கல்லீரலைச் சுத்தப் படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய் களையும் தடுக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய் களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும். நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஓர் எச்சரிக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

- விடுதலை நாளேடு, 9.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக